விதைகள் விதை நேர்த்தி முறை மற்றும் விதைக்கும் முறை..
நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிருந்து பிரித்தெடுக்க தண்ணீரீல் ஊறவைக்க வேண்டும்.
6-24மணி நேரம் ஊறவைப்பது நல்லது..
கடினமான விதைகளை 24 மணிநேரம் ஊறவைப்பது நல்லது..
தண்ணீர் அதிகம் ஊற்றி கொள்ளவும்..
1 மணி நேரம் கழித்து தண்ணீரீல் மேலே மிதக்கும் விதைகளை நீக்கி விடவேண்டும்..
தண்ணீரீல் மூழ்கி உள்ள விதைகளை பயன்படுத்த வேண்டும்...
இந்த விதைகள் அதிக முளைப்பு திறன் இருக்கும்...
விதைகளை மேலும் முளைப்பு திறனை அதிகரிக்க கண்டிப்பாக இதை செய்யவும்..
இதில் உங்களிடம் எது உள்ளதோ ஏதாவது ஒன்று...
பஞ்சகாவியா
அசோஸ்பயிரனம், சூடோமோனஸ், ரைசோபியம், ட்ரோக்கோடெர்மா கலவை
ஜீவாமிர்தம்
பீஜாமிர்தம்
புளித்தமோர்
விதைக்கு தேவையான அளவு கெட்டியாக கலந்து கொள்ளவேண்டும்..
கலந்து கொள்ள.வடித்த கஞ்சியை பயன்படுத்தி கொள்ளலாம்...
அதில் விதைகளை போட்டு கிளறி கொள்ளவும்.. 30 நிமிடம் வைத்து உளரவைத்து நடவு செய்யலாம்...
இவ்வாறு விதைநேர்த்தி செய்வதால் முளைப்பு திறன் வேர் வளர்ச்சி மற்றும் வேர் பூச்சி தாக்குதல் இல்லாமல் நன்கு வளரும்....
மேலும் நாற்றுகளை நடும் போது இதில் நினைத்து நட்டால் வேர்புழு பூஞ்சை தாக்குதலை தவிர்க்கலாம்...
====++++====
விதைகளை விதைக்கும் போது கவனிக்க வேண்டியது...
மண்கலவை தேங்காய் நார் கழிவு மண்புழுஉரம் மற்றும் உயிர் உரங்களை கலந்து கொண்டு குழிதட்டு அல்லது தொட்டிகளில் நிரப்பவும்...
நிரப்பிய பின்பு கைகளை கொண்டு மண்ணில் அழுத்தவும்...
பிறகு விதைகளை போட்டு சிறிது மண்கலவை கொண்டு மூடவும்...
அதிகமான ஆழத்தில் விதைக்க கூடாது..
கீரை மற்றும் சிறிய விதைகளை தூவிட்டு மண்னண கிலரிவிட்டால் போதும்..
தண்ணீர் தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.. தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும்...
தண்ணீர் தேங்கினால் விதைகள் அழுகிவிடும்.
பிறகு பிளாஸ்டிக் கவரை போட்டு மூடி வைக்கலாம். இதனால் பூச்சி எலி போன்றவைகளிலிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் ஈரப்பதம் இருக்கும்...
விதைகள் முளைத்த பின்பு பிளாஸ்டிக் பேப்ரை எடுத்து விடவும்.
ஈரப்பதம் குறையும் போது தண்ணீர் தெளித்தால் போதும்..
விதைத்து முதல் நன்றாக முளைப்பு வரும் வரை நிழலில் வைக்க வேண்டும்...
நன்றாக முளைப்பு வந்தவுடன் வெயிலில் வைக்கவும்....
இவ்வாறு செய்தால் போதும் விதைகள் நன்றாக முளைத்து வரும்..
நன்றாக வளர்ந்த நாற்றுகளை தேர்வு செய்து பெரிய தொட்டியில் நடவு செய்யவும்.. அவ்வாறு செய்யும் போது நாற்றுகளை உயிர் உரங்கள் கலந்த தண்ணீரில் மூழ்கி எடுத்து நடவும்....
பிரசன்னா திருச்சி

Comments
Post a Comment