விதை நேர்த்தி முறை...
நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிருந்து பிரித்தெடுக்க தண்ணீரீல் ஊறவைக்க வேண்டும்.
6-24மணி நேரம் ஊறவைப்பது நல்லது..
தண்ணீர் அதிகம் ஊற்றி கொள்ளவும்..
1மணி நேரம் கழித்து தண்ணீரீல் மேலே மிதக்கும் விதைகளை நீக்கி விடவேண்டும்..
தண்ணீரீல் மூழ்கி உள்ள விதைகளை பயன்படுத்த வேண்டும்...
இந்த விதைகள் அதிக முளைப்பு திறன் இருக்கும்...
விதைகளை மேலும் முளைப்பு திறனை அதிகரிக்க.... தேவை என்றால்...
இதில் உங்களிடம் எது உள்ளதோ ஏதாவது ஒன்று...
பஞ்சகாவியா
அசோஸ்பயிரனம், சூடோமோனஸ், ரைசோபியம், ட்ரோக்கோடெர்மா கலவை
ஜீவாமிர்தம்
பீஜாமிர்தம்
புளித்தமோர்
விதைக்கு தேவையான அளவு கெட்டியாக கலந்து கொள்ளவேண்டும்..
கலந்து கொள்ள.வடித்த கஞ்சியை பயன்படுத்தி கொள்ளலாம்...
அதில் விதைகளை போட்டு கிளறி கொள்ளவும்.. 30 நிமிடம் வைத்து உளரவைத்து நடவு செய்யலாம்...
இவ்வாறு விதைநேர்த்தி செய்வதால் முளைப்பு திறன் வேர் வளர்ச்சி மற்றும் வேர் பூச்சி தாக்குதல் இல்லாமல் நன்கு வளரும்....
மேலும் நாற்றுகளை நடும் போது இதில் நினைத்து நட்டால்
வேர்புழு பூஞ்சை தாக்குதலை தவிர்க்கலாம்...
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment