சூப்பர் ஊக்கி

சூப்பர் ஊக்கி....

இந்த கரைசலை மாதம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

இதில் பெரும்பாலான சத்துக்கள் உள்ளன.....

இதனால்

செடி வளர்ச்சி நன்றாக இருக்கும்...

பூ பூக்க உதவும்...

அதிக பூக்கள் பெரிதாக பூக்க உதவும்...

மொட்டுக்கள் உதிர்வதை தடுக்கும்..

அதிக காய்கறிகள் காய்க்க உதவும்...

காய்கறிகள் திரட்சியாக பெரிதாக காய்க்க உதவும்...

அதிக விளைச்சல் எடுக்க உதவும்....

அனைத்து விதமான தாவரங்களுக்கும் கொடுக்கலாம்....

கடுகு 50 கிராம்
நிலக்கடலை 50 கிராம்.....

இரண்டையும் நன்றாக தூளாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்....

5 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கலந்து மூடி நிழலில் வைக்கவும்...

தினமும் 3 முறை கலக்கி விடவும்...

10 நாள் இந்த கரைசலை வைக்கவும்...

11 நாள் நன்றாக கலக்கி கொண்டு 1:4 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து பிறகு செடிகளுக்கு ஊற்றவும்...

தொட்டி மண்னண கிழரி விட்டு பிறகு தண்ணீர் ஊற்றினால் சிறந்தது...

200 மில்லி அளவு இந்த கரைசல் தண்ணீர் செடிகளுக்கு ஊற்றலாம்...

மாதம் ஒருமுறை கொடுப்பதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்....

கால்சியம், மாங்கனீஸ், பொட்டாசியம், விட்டமின், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் அதிக அளவில் மற்றும் அமிலங்கள் உள்ளது...

போலிக் அமிலம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.

முயற்சி செய்து பாருங்கள்...

பிரசன்னா திருச்சி...

Comments

Post a Comment