முருங்கை இலை ஊக்கி...
இதில் அதிகமாக
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள், வைட்டமின் பி மற்றும் சி, நார்ச்சத்து உள்ளன.
மேலும் வைட்டமின்கள் கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.
இதனால் தாவரங்கள் தேவையான சத்துக்கள் கிடைக்கும்...
முருங்கை இலையை நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்..
1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் ஊற்றிவிடவும்..
உங்களிடம் ஆக்ஸிஜன் மோட்டார் இருந்தால் வாளியில் பொருத்தவும்..
3 மணி நேரம் கழித்து கரைசலை செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்...
இது தாவரங்களுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது..
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment