பாகற்காய் வளர்ப்பு....
பாகற்காய் வளர்க்க ஏற்ற காலம் கோடை மற்றும் பருவ மழை பெய்யும் காலங்களில்..
வெப்ப நிலை 25-35 தாங்கி வளரும்....
தொட்டி 15 இன்ச் பயன்படுத்தி கொள்ளலாம்.....
மண்கலவை..
20% தொழுஉரம்
30% மண்புழு உரம்
20% மணல் அல்லது தேங்காய் நார் கழிவு
30% மண்
விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கவும்....குழி தட்டு அல்லது சிறிய பைகளில் விதைக்கலாம்..
10-20 நாளில் முளைத்து வரும்...
15 நாளில் செடி நன்றாக வளர்ச்சி இருக்கும் இப்பொழுது பெரிய தொட்டியில் நடவு செய்யவும்....
நன்றாக வளர்ந்த நாற்றுகளை தேர்ந்தெடுத்து நடவும்....
ஒவ்வொரு15 நாளும் ஊக்கி கரைசலை கொடுக்கவும்... மற்றும் பூச்சி கொல்லி அடிக்கவும்.
பூக்கும் போது அதிகம் பூ பூக்க பொட்டாசியம் ஊக்கி பயன்படுத்வும்...
30 நாள் ஒருமுறை உர கலவை கொடுக்க வேண்டும்..
40 நாளில் பூ பூக்கும்....இப்போது பொட்டாசியம் சத்து ஊக்கி கொடுக்க வேண்டும்..
வளர்ச்சிக்கு ஏற்ப 65 நாளில் இருந்து அறுவடை செய்து கொள்ளலாம்......
பிரசன்னா திருச்சி......

Comments
Post a Comment